நாம் வரி விதிக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஒருபோதும் இந்த சலுகையை அறிவித்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

ரேடியோ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா வரிகளால் எங்களை கொல்கிறது, இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது, பிரேசில் வரிகளால் எங்களை கொல்கிறது.

அவர்களை விட வரிகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்த உலகில் வரி விதிப்பு பற்றி என்னை விட நன்றாக புரிந்து கொண்டவர், வேறு எவரும் இல்லை, இந்தியா தான் உலகில் அதிக வரி விதிக்கும் நாடு.

ஆனால் இப்போது அமெரிக்கா மீது இனி எந்த வரியும் இருக்காது என்று அவர்கள் தன்னிடம் கூறியுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பு இல்லாவிட்டால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள்.

அமெரிக்கா வரி விதிக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஒருபோதும் இந்த சலுகையை அறிவித்திருக்காது. அதனால் வரி விதிப்பு அவசியம்.

வரி விதிப்பு அமெரிக்காவிற்கு பேரம்பேசும் சக்தியை வழங்குகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *