BREAKING NEWS

இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை! பிற்பகல் 1 மணிக்கு பின்னரான வானிலை மாற்றம்

MI
mithuna mithuna in Latest Updates
Report
இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை! பிற்பகல் 1 மணிக்கு பின்னரான வானிலை மாற்றம்
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று 06.10.2025 பிற்பகல் 1 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலவும் சீரற்ற காலநிலையில், பொதுமக்களுக்கு அபாயத்தைக் குறைக்க தேவையான முன்னறிவிப்புகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.