BREAKING NEWS

இ.மி.ச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

AD
admin in Latest Updates
Report
இ.மி.ச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறைக்கு எதிராக, பொறியியலாளர்கள் உட்பட மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

மறுசீரமைப்பு செயல்முறையைச் சீர்செய்து ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளைப் பாதுகாக்க சமர்ப்பிக்கப்பட்ட 24 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, மின்சார சபையின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இந்தப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொறியியல் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்தார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை, ஊழியர்களின் ஊக்கத்தொகை மற்றும் பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், சரியான பதில் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.