BREAKING NEWS

83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report
83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகொல்ல பகுதியில் பல நபர்களுக்கு சொந்தமான 83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளில் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் சந்தேக நபர் ஒருவரும் கணேமுல்லயைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.