எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாராந்தம் புதன்கிழமைகளில் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.