2026-ஆம் ஆண்டுக்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கான உத்தியோகபூர்வ சுபநேர அட்டவணை (நக்ஷத்திர சீட்டு) இன்று (17) வெளியிடப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி இந்த அட்டவணையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார். பாரம்பரிய கலாசார முறைப்படி கணிக்கப்பட்ட இந்த நக்ஷத்திர சீட்டு, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பிறக்கும் நேரம், மருத்துவ நீராடல், உணவு சமைத்தல், வேலைகளை ஆரம்பித்தல், கைவிசேடம் பரிமாறல் மற்றும் ஆடை அணிய வேண்டிய நிறங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இந்த அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த நேரத்தில் இந்தப் பாரம்பரியங்களைப் பின்பற்றும் வகையில் இந்த சுபநேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.