BREAKING NEWS

குவைத் எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ட்ரோன் தாக்குதல்

PR
priya priya punidha in Latest Updates
Report
குவைத் எண்ணெய் நிறுவனம் மீது ஈரானின் ட்ரோன் தாக்குதல்

தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. ​

மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரக்காலக் குழுவினர் போராடி வருகின்றனர். 

அத்துடன் சில அலகுகள் கட்டாயமாக மூடப்பட்டுள்ளன. 

ஈரானின் சவுத் பார்ஸ் வளாகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. 

இதில் வளைகுடா நாடுகள் ஈரானின் கோபத்திற்கு இலக்குகளாக மாறியுள்ளன. 

அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையின் அடிப்படையில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளின் மீதான தமது தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார். 

எனினும் தமது இழப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.