BREAKING NEWS

தென் கொரியா தொழிற்சாலையில் தீ விபத்து: 10 பேர் பலி

PR
priya priya punidha in Latest Updates
Report
தென் கொரியா தொழிற்சாலையில் தீ விபத்து: 10 பேர் பலி

தென் கொரிய கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் மாயமாகியுள்ளனர்.

கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ பற்றியுள்ளது. குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர்.

தீ பற்றியபோது, ​​தொழிற்சாலையில் பணியில் தொழிலாளர்கள் 170 பேர் இருந்தனர் என தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் 59 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீ பற்றியதற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை.

கட்டடம் இடிந்து விழும் அபாயம் இருந்ததால், தீயணைப்பு வீரர்களால் உடனடியாகத் தொழிற்சாலைக்குள் நுழைய முடியவில்லை. இதுவே உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.