எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்திற்கும் கூடுதலாக அதிகரிக்க வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது.
இது தொடர்பான யோசனையை நாளைய தினம் (22) அமைச்சரவையில் முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பை கோரி பஸ் உரிமையாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.