கடந்த ஆண்டு நேபாளத்தில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் 70-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புகளுக்குக் காரணமானவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி இன்று கைது செய்யப்பட்டார்.
இவருடன் சேர்த்து முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போராட்டக்காரர்களை ஒடுக்கியதில் காட்டிய “குற்றவியல் அலட்சியம்” தொடர்பில் விசாரணைக்குழு அளித்த பரிந்துரையின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
35 வயதான புதிய பிரதமர் பாலே ஷா பதவியேற்ற மறுதினமே இந்த அதிரடி கைது இடம்பெற்றுள்ளது.