சூரியனின் தற்காலிக வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று (ஏப்ரல் 05) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையின் வான்பரப்பில் சூரியன் உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நண்பகல் 12:13 க்கு , தொடங்கொட, ரத்கம, யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, ரன்ன, களமெட்டிய மற்றும் உஸ்ஸன்கொட போன்ற பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சியில் அமையும்.
சூரியன் உச்சிக்கு வரும் வேளையில், நிலத்தில் நேரடியாகப் படும் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். எனவே, முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையான காலப்பகுதியில் நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்த்து, போதுமான அளவு நீர் அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.