BREAKING NEWS

புத்தாண்டு கால இணைய மோசடிகள்: பொலிஸார் அவசர எச்சரிக்கை!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
புத்தாண்டு கால இணைய மோசடிகள்: பொலிஸார் அவசர எச்சரிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் இணைய கொள்வனவுகள் மற்றும் பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் போலி புத்தாண்டு சலுகைகள் மற்றும் பரிசுகள் மூலம் தனிப்பட்ட விபரங்கள் திருடப்படுகின்றன.

QR குறியீடு, போலி வங்கி இணையதளங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் பணத்தை அபகரிக்கின்றனர்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலியான முதலீட்டுத் திட்டங்களை மோசடியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அறிமுகமில்லாத இணைப்புகளை (Links) அழுத்துவதையோ (click )அல்லது வங்கி விபரங்களை இணையத்தில் பகிரவோ வேண்டாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கேட்டுக்கொண்டுள்ளது.