நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 11 பெண்களும் 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, மொரட்டுவை – லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக சூதாட்ட விடுதி ஒன்று இயங்கி வருவதாக,அங்குலானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக ,தினமும் காலை முதல் இரவு வரை இந்த சூதாட்ட விடுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் பிரதேசவாசிகள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.