இன்று தங்கத்தின் விலை 5,000 ரூபாய் வரையில்அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று மூன்று முறை தங்க விலை உயர்வடைந்து “22 காரட்” ஒரு பவுண் தங்கத்தின் விலை 271,000 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை, “22 காரட்” பவுண் ஒன்று ரூபாய் 266,400ற்கு
விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை , கடந்த சனிக்கிழமை 288,000 ரூபாயாக ஆக இருந்த “24 காரட்” ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று மூன்றாவது முறையாக அதிகரித்து 293,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.