BREAKING NEWS

கதிர் அறுக்கும் வேளையில் கோர விபத்து : நான்கு பெண்கள் பலி

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
கதிர் அறுக்கும் வேளையில் கோர  விபத்து : நான்கு பெண்கள் பலி

கடலூர்: வேப்பூர் அருகே சோளத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் அவர்கள் நேற்றிரவு உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கிராமப் பகுதியில் நேற்று மாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

அப்போது, அருகிலுள்ள சோளத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் மீது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியுள்ளது. இதில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இத்துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மின்னல் பாதுகாப்பு குறித்து மக்கள் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். இடி, மின்னல் ஏற்படும்போது உயரமான இடங்கள், மரங்களுக்கு அடியில் அல்லது சமவெளிப் பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பான கட்டிடங்களுக்கு உள்ளே இருப்பது மட்டுமே இதுபோன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.