அனைத்து முன் பள்ளிகளிலும் ஏற்பட போகும் மாற்றம் 2026ம் ஆண்டிலிருந்து நாட்டின் அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடவிதானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்ற இணைக்குழு நேற்று கூடியது.ஆரம்பகால சிறுவர் முன்பருவ பாடதிட்ட தயாரிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதமர் இங்கு தெரிவித்தார்.

அத்துடன் 19000க்கும் அதிகமான முன்பள்ளி ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.