நிதி அமைச்சரான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாதீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி தொடங்கி ஆறு நாட்கள் நடைபெறும்.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
குழு நிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி தொடங்கி 17 நாட்கள் இடம்பெறும்.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.