பொலன்னறுவை மனம்பிட்டிய, மலியதேவபுர பகுதியில் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற 15 வயது சிறுவன் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த தாத்தாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று (14) இரவு 7.30 அளவில் சிறுவன் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனம்பிட்டிய காவல்துறையின் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் பி. ஜி.எஸ்.ஜி. அரியரத்ன தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது
15 Nov 2025 | 10:34 AM
11 views
பொலன்னறுவையில் விபத்து : 15 வயது சிறுவன் உயிரிழந்தார்
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கைக்குப் பெருமை! – வெண்கலப் பதக்கம் வென்று பிரதீப் சோமசிறி சாதனை.
11 Apr 2026 · 6:52 AM