மலையகத் தமிழ்ச் சமூகத்தினர், இறந்தவர்களைக் கௌரவத்துடன் புதைக்கும் உரிமை (Right to Dignified Burial) மற்றும் மனித கண்ணியத்தை நிலைநாட்டுவதற்காக, ஒரு முக்கியமான மைல்கல்லாக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த 07ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது, மலையகத் தமிழ்ச் சமூகத்தினருக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட மயானங்களுக்கான அணுகலை முடிவுக்குக் கொண்டு வரக் கோருகிறது.

தோட்டத் தொழிலாளர்களின் தலைமுறையினர், தங்கள் இறந்த அன்புக்குரியவர்களைத் தற்காலிகமான, ஒதுக்கப்படாத தோட்ட நிலங்களில் புதைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதாகவும், பின்னர் அந்த நிலங்கள் தேயிலை, இறப்பர், தென்னை போன்ற வணிகப் பயிர்களுக்காக அகற்றப்படுவதாகவும் மனுவில் வாதிடப்பட்டுள்ளது.

இலங்கை சினிமா