அமெரிக்காவுடன் புதிய இரட்டை ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா சுமார் 93 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 823 கோடி இந்திய ரூபாய்) பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய இராணுவத்துக்காக வாங்கப்பட்டுள்ள இந்த புதிய ஆயுதங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், எதிர்வரும் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து சமையல் எரிவாயு (LPG) வழங்குவதற்காக, இந்தியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
தற்போது இந்தியா–அமெரிக்கா உறவில் சுமுகமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த ஒப்பந்தங்கள் வர்த்தகத்தைத் தாண்டி பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் இரு நாடுகளின் கூட்டாண்மையை மேலும் வலுவாக்கும் எனக் கூறப்படுகிறது.