BREAKING NEWS

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

நாட்டில் கடும் மழை காரணமாகப் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகிய நீர் நிலைகளின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் உள்ளது.