யூடியூப் (YouTube) ஊடாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் தமக்கு நேரடி அவதூறு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து, வணக்கத்திற்குரிய பிடிதுவே சிறிதம்ம தேரர் தலா 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி இரண்டு தரப்பினருக்கு எதிராக என்டறவாசி (சட்ட அறிவித்தல்) அனுப்பியுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறி மற்றும் வணக்கத்திற்குரிய இராஜங்கணே சத்தாரத்தன தேரர் ஆகியோருக்கே இந்த சட்ட அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தெஹிவளை, பெல்லன்தர வீதியில் வசிக்கும் சிறி சமந்தபத்ர தேரரின் அறிவுறுத்தலின் பேரில், சட்டத்தரணி டெனிஷா விதானபத்திரனவினால் கடந்த டிசம்பர் 18 மற்றும் 24 ஆகிய திகதிகளில் இக்கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

குறித்த அறிவித்தல் கிடைத்து 14 நாட்களுக்குள் கோரப்பட்டுள்ள நட்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால், அந்தத் தொகைக்கான சட்டபூர்வ வட்டி மற்றும் நீதிமன்றக் கட்டணங்களுடன் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி அல்லது அதனையொட்டிய தினத்தில் இவ்விருவரும் இணைந்து, தனது கட்சிக்காரரான தேரரை இலக்கு வைத்து வையத்தகு (துவேஷமான) கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பொன்றைக் கடுமையாக விமர்சித்ததன் ஊடாக, 2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றம் புரிந்துள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக தர்ம போதகராகவும், நூலாசிரியராகவும், சமூக சேவகராகவும் சிறி சமந்தபத்ர தேரர் கட்டியெழுப்பியுள்ள நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே இந்த பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை சினிமா