BREAKING NEWS

“தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற முயன்றால் கிளர்ந்தெழுவோம்: கஜேந்திரகுமார் அணிக்கு சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை”

SR
sritharan sri in Latest Updates
Report
“தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற முயன்றால் கிளர்ந்தெழுவோம்: கஜேந்திரகுமார் அணிக்கு சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை”

இலங்கையில் வேறொரு மதம் பெரும்பான்மையாக இருந்திருந்தால், அந்த மதத்துக்கு எதிராக செயற்பட்டுவிட்டு சுதந்திரமாக இருக்க முடியுமா? பௌத்த தர்மம் ஊடாக வழங்கப்பட்ட போதனைகளால்தான் பொறுமை காக்கின்றோம்.

யாழ்ப்பாணம்  – தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் எமது பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிக்கக்கூடாது. இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும். 

“திஸ்ஸ விகாரைக்கு அழுத்தம் கொடுத்து, அதனை அகற்ற முற்பட்டால் அதற்கு எதிராக நாங்கள் கிளர்ந்தெழுவோம். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வசமிருந்த காணியில் 98 சதவீதம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பௌத்த நாடென்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். திஸ்ஸ விகாரையில் பௌத்த மக்களுக்குரிய வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. அதற்கு எதிராக கஜேந்திரகுமாரின் ஆட்கள் வந்து போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் இவர்கள் கொழும்புக்கு வந்து சுதந்திரமாக கோயிலுக்குச் செல்லும் நிலை காணப்படுகின்றது. இலங்கை பௌத்த நாடென்பதால்தான் இது சாத்தியப்படுகின்றது.

சரத் வீரசேகர..