தேசிய கண் மருத்துவமனை மருத்துவர்களினால் இன்றைய தினம் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
தேசிய கண் மருத்துவமனையின் பதில் பணிப்பாளரின் தன்னிச்சையான இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, இன்று காலை 8 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.