இலங்கைக்கான ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதி’ (EFF) திட்டத்தின் அடுத்தகட்ட மீளாய்வு குறித்த கொள்கை ரீதியான விவாதங்களை முன்னெடுப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று மிக விரைவில் இலங்கைக்கு வருகை தரும் என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார்.
‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக, இலங்கையின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்த ஐந்தாவது மீளாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க, ஏற்கனவே சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர நிதியாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது சூறாவளி பாதிப்புகள் குறித்த முதற்கட்ட ஆய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான கொள்கை விவாதங்களை முன்னெடுக்க சர்வதேச நாணய நிதியம் தயாராகி வருகிறது.