BREAKING NEWS

மின்சார வாகனங்களில் (EVs) மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை சீனா தடை

PR
priya priya punidha in Latest Updates
Report
மின்சார வாகனங்களில் (EVs) மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை சீனா தடை

மின்சார வாகனங்களில் (EVs) மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை சீனா தடை செய்துள்ளது.

இதன் மூலம் பில்லியனர் எலோன் மஸ்க்கின் டெஸ்லாவால் பிரபலப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய வடிவமைப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய முதல் நாடாக சீனா உருவெடுத்துள்ளது.

சீனாவில் Xiaomi மின்சாரக் கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு உட்பட பல சம்பவங்களுக்குப் பின்னர், உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகளால் மின்சார வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்த ஆய்வில் மின்சாரக் கோளாறுகள் கார்களின் கதவுகள் திறக்கப்படுவதைத் தடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

புதிய விதிமுறைகளின் கீழ், கார்கள் அவற்றின் கதவுகளின் உள்ளேயும் வெளியேயும் இயந்திர வெளியீடு இருந்தால் மட்டுமே விற்க அனுமதிக்கப்படும் என்று சீனாவின் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும்.

சீனாவின் புதிய ஆற்றல் வாகன (NEV) சந்தையில் மறைக்கப்பட்ட கைப்பிடிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் மின்சார கார்கள், கலப்பின கார்கள் மற்றும் எரிபொருள் மூலம் இயக்கப்படும் கார்கள் ஆகியவை அடங்கும்.

இந்த நடவடிக்கைகள் சீன சந்தையில் விற்கப்படும் மொடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், உலகளாவிய கார் துறையில் நாட்டின் மிகப்பெரிய இருப்பு என்பது இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதாகும்.

டெஸ்லாவின் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகள் ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இது குறித்து ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளும் பரிசீலித்து வருகின்றனர்.