BREAKING NEWS

மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வர- ஹங்சக விஜேமுனி

PR
priya priya punidha in Latest Updates
Report
மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வர- ஹங்சக விஜேமுனி

மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய மனநலக் கொள்கையானது நூறு ஆண்டுகள் பழமையானது. எனவே, அதனை நவீனமயப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என குறிப்பிட்ட பிரதி அமைச்சர்,

நாட்டின் மனநலச் சுகாதார சேவையானது தற்போது ஒரு முக்கியமான திருப்புமுனையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது ஒரு கடினமான காரியம் என்ற போதிலும், இதற்கான முதற்கட்ட வரைவுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும்

அவை தற்போது நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன், இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.