BREAKING NEWS

தபால் திணைக்களத்தின் புதிய இலக்கு: 15,000 மில்லியன் ரூபா வருமானத்தை நோக்கி நவீன பாய்ச்சல்!

DH
dhusanthi dhusi in சமீபத்திய செய்திகள்
Report
தபால் திணைக்களத்தின் புதிய இலக்கு: 15,000 மில்லியன் ரூபா வருமானத்தை நோக்கி நவீன பாய்ச்சல்!

இலங்கை தபால் திணைக்களம் இந்த ஆண்டில் 15,000 மில்லியன் ரூபா வருமான இலக்கை மிக எளிதாக அடையும் என ஊடகத்துறை மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மடவல உல்பத்த பகுதியில் 5.1 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட தபால் அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

வருமான வளர்ச்சி மற்றும் கடந்த கால புள்ளிவிபரங்கள்:

கடந்த ஆண்டு (2025): திணைக்களத்தின் முன்னேற்றத்திற்காக 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 13,450 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டது.

நடப்பு ஆண்டு இலக்கு: கடந்த கால வளர்ச்சியின் அடிப்படையில் இந்த ஆண்டு 15,000 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன:

209 பாதுகாப்பு கேமராக்கள் (CCTV)- 27 மில்லியன் ரூபா225 புதிய கணினிகள்- 74 மில்லியன் ரூபா1,500 டேப்லெட் (Tab) கணினிகள்- 101 மில்லியன் ரூபா

பாரம்பரிய தபால் சேவையைத் தாண்டி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதே இந்த முதலீடுகளின் முக்கிய நோக்கம் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.