பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோவை இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வத்திக்கானில் அரசுகளுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் மிஹாயிடா பிளாஜை சந்தித்து உத்தியோகபூர்வமாக அழைப்பை வழங்கினார்.