BREAKING NEWS

போர்ப் பதற்றம் காரணமாக சேவைகள் பாதிப்பு சாத்தியம்

PR
priya priya punidha in Latest Updates
Report
போர்ப் பதற்றம் காரணமாக சேவைகள் பாதிப்பு சாத்தியம்

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையக்கூடும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். 

இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், இதனால் எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். 

தற்போதைய போர்ச் சூழலால் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையே இந்தத் தாமதத்திற்குப் பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். 

இதற்கமைய, நாட்டின் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக, நாட்டில் விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலையை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.