BREAKING NEWS

ஜா-எலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்

PR
priya priya punidha in Latest Updates
Report
ஜா-எலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பட்டுவத்தே சாமர என்பவரின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த சந்தேக நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.