BREAKING NEWS

போதைப்பொருள் சந்தேகத்துடன் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டது

PR
priya priya punidha in Latest Updates
Report
போதைப்பொருள் சந்தேகத்துடன் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டது

போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உர மூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தேவேந்திரமுனை பகுதிக்கு தெற்கே ஆழ்கடலில், கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் மீன்பிடிப் படகையும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தற்போது கரைக்குக் கொண்டு வரும் பணிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.