BREAKING NEWS

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தற்கொலை: வெளியானது காரணம்

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தற்கொலை: வெளியானது காரணம்
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தற்கொலை என்பது தீர்வல்ல.

இதுவே, மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூக நலன் விரும்பிகளின் கருத்தாக உள்ளது.

இந்த விடயத்தில் சமூகத்தின் பங்களிப்பு, தனி மனிதனுக்குக் கிடைக்காதபோது, அதன் விளைவாக தற்கொலைகள் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இதனைப் பிரதிபலிக்கும் விதத்தில்,

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி நேற்று உயிரிழந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதினால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

தம்புள்ளை தேசிய பாடசாலையில் கல்வி பயின்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.

நேற்று தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாணவி, இரவு உறங்கிய பின்னர் காலை கண்விழிக்காத காரணத்தினால் பெற்றோர் அவரைப் பரிசோதித்தபோது, அவர் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

பின்னர் பெற்றோர் குறித்த மாணவியை தம்புள்ளை ஆதார மருத்துவமனை அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், அவர் அதற்கு முன்னரே குறித்த மாணவி உயிரிழந்திருந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்