திக்கோவிட்ட துறைமுகத்திற்கு போதைப்பொருட்களுடன் கொண்டு வரப்பட்ட இரண்டு படகுகளுக்கு, கடலில் வைத்து போதைப்பொருட்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு படகு மிரிஸ்ஸ துறைமுகத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே திக்கோவிட்ட துறைமுகத்தில் சிக்கிய இரண்டு படகுகளுக்கும் போதைப்பொருட்களை கைமாற்றுவதற்கு இந்த படகு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.