BREAKING NEWS

வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்

PR
priya priya punidha in Latest Updates
Report
வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்

பயாகலை, மெட்டியமுல்ல பகுதியில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) மனிதாபிமானப் படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ரிவோல்வர் வகை துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள் மற்றும் கைவிலங்கு ஒன்று என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 55 மற்றும் 61 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பயாகலை மற்றும் கலகெடிஹேன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.