BREAKING NEWS

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு அறிவித்துள்ளது

PR
priya priya punidha in Latest Updates
Report
நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு அறிவித்துள்ளது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (27) இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை (OPR) வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரண்டினையும் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை எதிர்வரும் காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவும் அதேவேளை வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென சபை கருதுவதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.