பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இன்று (23) நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலையை ரூ. 10 உயர்த்த முடிவு செய்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 450 கிராம் பாணின் விலை ரூ. 130 ஆக உயர்த்தப்படும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், இன்று நள்ளிரவு முதல் மற்ற அனைத்து பேக்கரிப் பொருட்களின் விலையையும் ரூ. 10 உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.