இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் தோனி அதிகாரபூர்வமாக ட்ரோன் விமானி உரிமம் பெற்றுள்ளார். ட்ரோன் விமானி உரிமத்தை அதிகாரபூர்வமாக பெற்றதாக சமூகவலைத்தள பக்கத்தில் தோனி அறிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் விமானி பயிற்சி நிறுவனத்தில் தோனி பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார். அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடரும் ஆவார்.
இந்தியாவின் முன்னணி ட்ரோன் உற்பத்தியாளர்களில் ஒன்றான கருடா ஏரோஸ்பேஸ், அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களின் மேற்பார்வையின் கீழ் 2,500 இற்கும் மேற்பட்ட விமானிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. அதில் பங்கேற்று முறையான பயிற்சி பெற்ற தோனி ட்ரோன் விமானி உரிமத்தை அதிகாரபூர்வமாக பெற்றுள்ளார்
08 Oct 2025 | 10:04 AM
17 views
தோனியின் புதிய சாதனை
MI
Mithu Mithu
in Latest Updates
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
யாலா பருவத்திற்கு நீர் போதுமானது; விநியோகத்தில் சிக்கல் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு
03 Apr 2026 · 10:44 AM