BREAKING NEWS

நாட்டில் டித்வா புயலுக்கு பின்னரான நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று

PR
priya priya punidha in Latest Updates
Report
நாட்டில் டித்வா புயலுக்கு பின்னரான நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், 

மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். 

மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள். 

மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். 

மு.ப. 11.30 டித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவினை நியமிப்பதற்கான தீர்மானம் – பிரேரிக்கப்படவுள்ளது. 

மு.ப. 11.30 – பி.ப. 5.30 நாட்டில் டித்வா புயலுக்கு பின்னரான நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி).