தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மக்களின் நலனைப் பாதிக்கும் மதுபானம் மற்றும் இனிப்புக் கலந்த பானங்கள் மீது மிக மோசமான வரி விதிப்பு காரணமாக, விலை மலிவாக இருப்பதாக உலக சுகாதார உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

வருமானம் உயர்ந்து வரும் சூழலில், இந்தத் தயாரிப்புகளின் விலை அதற்கேற்ப உயர்த்தப்படவில்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இந்தப் பானங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. 

வரி குறைவாக இருப்பதால், மக்கள் இவற்றை எளிதாகக் கொள்வனவு செய்து பயன்படுத்துவதே நோய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

மேலும், மதுபானங்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது. 

குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் அத்தகைய முறை பின்பற்றப்படாதமையால், அதிக போதையுள்ள மதுபானங்களும் குறைந்த விலையில் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. 

மேலும் குளிர்பானங்கள் மற்றும் இனிப்புக் கலந்த பழச்சாறுகள் மீதான வரியானது, நுகர்வைக் குறைக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை சினிமா