கைது செய்யப்பட்ட நடிகர் ஹேமல் ரணசிங்க இன்று (03) கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 100,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பிரபல நடிகர் ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2026 ஜனவரி 8, அன்று ஹேவ்லோக் சிட்டியில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரணசிங்க இன்று காலை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு ரணசிங்கவுக்கு பலமுறை அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.