வடகொரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி கிம் ஜாங்-உன் (Kim Jong-un) 99.93% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவான மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 100 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதன் மூலம், அந்நாட்டில் கிம் ஜாங்-உன்னின் ஆதிக்கம் மற்றும் அதிகாரம் மீண்டும் ஒருமுறை அசைக்க முடியாத வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் கடுமையான தடைகள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், வடகொரிய மக்கள் தமக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெற்றியானது கிம் ஜாங்-உன்னின் ஆட்சிப் பலத்தை சர்வதேச அரங்கில் மீண்டுமொருமுறை பறைசாற்றியுள்ளது.