இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த தக் லைஃப் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இதனை தொடர்ந்து மணி ரத்னம் ஒரு காதல் கதையை படமாக்கப்போவதாக தகவல் வெளிவந்தன. சில நடிகர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், இறுதியாக விஜய் சேதுபதி தெரிவானார்.
ஆனால், இதுவரை இப்படத்தின் அறிவிப்பு வெளிவராமல் இருந்த நிலையில், நேற்று (20) அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிகனாக நடிக்கிறார்.
மேலும், முன்னணி நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் என அறிவித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். செக்க சிவந்த வானம் படத்திற்கு பின் இரண்டாவது முறையாக மணி ரத்னத்துடன் விஜய் சேதுபதி இப்படத்திற்காக கைகோர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.