குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு, இரண்டு நாடுகள் விமான சேவைகளை ஆரம்பித்துள்ளதாக துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பெலாரஸ் நாட்டுக்குச் சொந்தமான பெலாவியா ஏர்லைன்ஸ் (Belavia Airlines) மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ் (Red Wings Airlines) ஆகிய இரண்டு விமான நிறுவனங்களின் விமானங்கள் இன்று மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு வர திட்டமிட்டுள்ளதாக துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது