யாழில் (Jaffna) பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்றையதினம் (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து குறித்த பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து குறித்த பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பெலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பெலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.