BREAKING NEWS

40 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
40 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

இவ் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது 54,870 கிலோகிராம் போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடக பேச்சாளர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

இதில் 5 ,267 கிலோகிராம் கேரள கஞ்சா, 839 கிலோகிராம் ஹெரோயின், 2 ,038 கிலோ ஐஸ் மற்றும் 33,000 கிலோகிராம் ஹஷிஷ் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், 1,683,691 போதை வில்லைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.