வத்தளை பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (02) பிக்குணி ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நபர்கள் 58 மற்றும் 67 வயதுடைய வத்தளையைச் சேர்ந்தவர்கள் .
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (03) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
அந்த இரண்டு நபர்கள் பிக்குணியை திட்டி மிரட்டும் சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இந்த சம்பவம் நேற்று (02) இரவு வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ரத்னாவலி ஆராமய அருகில் இடம்பெற்றுள்ளது.