சிகிரியா பொலிஸ் பிரிவின் அவுடங்காவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் நேற்று (08) குழந்தை ஒன்று மூழ்கி உயிரிழந்தது.களனி, வடலுகம பகுதியில் வசிக்கும் 5 வயது குழந்தையே உயிரிழந்தது.

விபத்துக்குள்ளானபோது, குழந்தை தனது பெற்றோருடன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குழந்தையின் சரீரம் தம்புள்ளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை சினிமா