BREAKING NEWS

போதைப் பொருள் பயன்பாட்டைக் கண்டறியும் நடமாடும் பரிசோதனை

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
போதைப் பொருள் பயன்பாட்டைக் கண்டறியும் நடமாடும் பரிசோதனை

பயணிகள் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறியும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட நடமாடும் பரிசோதனைப் பேருந்து ஒன்றைத் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்தப் புதிய முன்முயற்சி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நடமாடும் பிரிவு, நாடு முழுவதும் உள்ள பயணிகள் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு திடீர் சோதனைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடமையில் இருக்கும்போது போக்குவரத்து ஊழியர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனைகள் உதவும்.