இண்டிகோ விமானத்தில் திடீரென பவர் பேங்க் தீப்பிடித்து எரிந்த காரணத்தினால், அதனை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு அல்லது தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 19 ஆம் திகதி டெல்லியில் இருந்து திமாப்பூருக்கு பயணிக்க இருந்த விமானத்தில், பயணி ஒருவர் வைத்து இருந்த பவர் பேங்க் திடீரென தீப்பிடித்தது.
எனினும் விரைந்து செயற்பட்ட ஊழியர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இதேவேளை, விமானத்தில் பவர் பேங்க்குகளை பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் எப்படி கையாள்கின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விமானங்களில் பவர் பேங்க்குகளை பயன்படுத்துவது அல்லது தடை விதிப்பது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.